சிறைச்சாலை அதிகாரி ஒருவரை தாக்கிவிட்டு கைதி ஒருவன் தப்பியோடியுள்ளான். நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Osny தடுப்புச் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவன் மனநல சிகிச்சைகளுக்காக Pontoise மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தான்.
அதன்போது வாகன தரிப்பிடத்தில் வைத்து அவன் தப்பி ஓடியுள்ளான். கைதிக்கு காவலாக வந்த அதிகாரியின் துப்பாக்கியை பறித்து அவரை நோக்கி சுட்டுவிட்டு அவன் தப்பி ஓடியுள்ளதாக அறிய முடிகிறது. ஆனால் குண்டு துளைக்காத மேலாடை அணிந்திருந்ததால் அதிகாரி உயிர்பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய கைதி தேடப்பட்டு வருகின்றான்.
- ⚫🇫🇷பிரான்ஸில் மூன்று மாதத்தில் மூன்றாவது தடுப்பூசி! வெளியான அறிவிப்பு!
- ⚫🇫🇷செம்மஞ்சள் எச்சரிக்கையில் ile-de-France!
- ⚫🇫🇷பிரான்ஸ் சுகாதார அமைச்சரின் புதிய திட்டம்! ஜனவரி முதல் ஆரம்பம்!
- ⚫இலங்கையின் ஹோட்டலில் மாணவனுடன் தங்கிய மாணவி! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
- ⚫இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு! 3000 கோழிகள் தீக்கிரை!