இன்று செவ்வாய்க்கிழமை காலை Claye-Souilly (Seine-et-Marne) நகரில் உள்ள Les Sentiers வணிக வளாகமே அச்சுறுத்தலுக்கு உள்ளானது. அப்பகுதி ஜொந்தாமினருக்கு மின்னஞ்சல் மூலம் கிடைத்த அச்சுறுத்தலை அடுத்து, காலை 8 மணியில் இருந்து காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் குறித்த வளாகத்துக்குள் தேடுதல் மேற்கொண்டனர்.
அங்கிருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்களை வெளியேற்றிவிட்டு அதிகாரிகள் வெடிகுண்டு அகற்றும் குழுவுடன் இணைந்து பணியாற்றினர் நண்பகல் வரை இந்த தேடுதல் நீடித்தது.
பின்னர் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டதும் வளாகம் திறக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
- ⚫🇫🇷பிரான்ஸில் மூன்று மாதத்தில் மூன்றாவது தடுப்பூசி! வெளியான அறிவிப்பு!
- ⚫🇫🇷செம்மஞ்சள் எச்சரிக்கையில் ile-de-France!
- ⚫🇫🇷பிரான்ஸ் சுகாதார அமைச்சரின் புதிய திட்டம்! ஜனவரி முதல் ஆரம்பம்!
- ⚫இலங்கையின் ஹோட்டலில் மாணவனுடன் தங்கிய மாணவி! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
- ⚫இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு! 3000 கோழிகள் தீக்கிரை!